Friday, March 20, 2009

Vaithikasri February 2009

நமதுதேசத்தின் கலாசாரத்தை மற்ற தேசங்களுக்கு வெளிப்படுத்துபவை நமது ஆலயங்களே. ஒவ்வொரு ஊரிலும் பற்பல தெய்வ ஆலயங்கள், கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற பழமொழிகளும் ஆலயங்களின் பெருமைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன,

ஆபி4ரூப்யாச்ச மூர்த்தீனாம் தே3வ: ஸான்னித்4யம்ருச்ச2தி என்பதாக ஆலயங்களில் தெய்வ உருவங்களை (சில்ப) சாஸ்திர முறைப்படி வடிவமைப்பதாலும், அர்ச்சகஸ்ய ப்ரபா4வேன சிலா ப4வதி கேவ:(ங்கர:). என்பதாக சிலைகளை ஆகம வைதீக தாந்த்ரீக முறைப்படி ப்ரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப் படுவதாலும், வருடாவருடம் திருவிழாக்கள் நடத்தப் படுவதாலும் தெய்வங்களுக்கு அருட்சக்தி ஸித்திக்கிறது, (தீக்ஷை பெற்று) வேதம் ஆகம வைதீகம் ப்ரயோகங்கள் கற்று, தெய்வங்களை பூஜை செய்யும் அர்ச்சகர்கள் (சிவாச்சார்யர்கள்) தெய்வ அருளை மக்களுக்கு பெற்றுத்தருபவர்கள் , புயல் வெள்ளம், போன்ற ஆபத்தான காலங்களிலும் பூஜைகளை தவறாது செய்து வரும் இவர்கள் பொதுமக்களுக்காக ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது,

ஆனால் தற்காலத்தில் சில அர்ச்சகர்கள் தாங்களது பெருமைகளை முழுமையாக உணராததால் உலகத்துடன் (நாகரிகத்துடன்) கலந்து விடுகின்றார்கள், இவர்களும் தாங்களது தகுதியை உணர்ந்து, வேதம் ஆகமம் ஸம்ஸ்க்ருதம் பாடல்கள் ஆகியவற்றில் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்,

பக்தர்களின் பெயர், ராசி சொல்லி அர்ச்சனை, ஸங்கல்பம் சொல்ல ஸம்ஸ்க்ருத ஞானம் அவசியம், அபிஷேகம் தீபாராதனை போன்ற காலங்களில் வேத மந்திரத்தை ஸ்வர சுத்தத்துடன் சொல்ல வேதத்தை முறையாக கற்றுக்கொள்ளுதல் அவசியம். இவற்றுடன் ஆசாரமும் (தூய்மை) அவசியம், முச்சந்தியில் அமைந்திருக்கும் விநாயகரை பூஜிக்கக்கூட ஆசாரம் தேவை.

தினஸரி ஸ்னானம் செய்தல், திருமணமானவர்கள் பஞ்சகச்ச முறையில் வேஷ்டி கட்டிக் கொள்ளுதல், குடுமி வைத்துக் கொள்ளுதல், வெளி இடங்களில் சாப்பிடாது இருத்தல், ஆகியவற்றை ஒவ்வொரு அர்ச்சகரும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும், தெய்வங்களை பூஜை செய்யும் போதாவது இவ்வாறு இருக்க முயற்சிக்கலாம்,

மக்கள் ஆலயத்தை நாடுகிறார்கள், தெய்வத்தை நம்புகிறார்கள், தெய்வ ஸான்னித்யம் அர்ச்சகர்களின் கையிலுள்ளது, ஆலய தெய்வத்தின் அருளை மக்களுக்குப் பெற்றுத் தரும் பாக்யத்தைப் பெற்றுள்ள அர்ச்சகர்கள், ஆலயத்தில் ஆசாரத்தோடும் ச்ரத்தையோடும் பூஜை செய்யவும் வேத மந்திரங்களை ஸ்வர சுத்தத்துடன் சொல்லவும் ஸ்ரீபகவான் அனுக்ரஹிக்கட்டும்.

வைதிக ஸ்ரீ: மர 2009

நாம் இன்றைய நாகரீகமான சூழ்நிலையிலும் கூட தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பி வாழ்க்கையை நடத்தி வருகிறோம், இதற்கு நம்மை ஆஸ்திகராக வளர்த்த நம் பெற்றோர்கள் காரணம் என்பதை மறக்க முடியாது, ஆகவேதான் பூஜை ஜபம் ஹோமம் பாராயணம் போன்ற விஷயங்களைப்பற்றி யாராவது ப்ரவசனம் செய்தால் நம்மால் புரிந்து கொள்ளவாவது முடிகிறது, அவ்வப்போது அவற்றில் ஈடுபடவும் முயற்சிக்கிறோம்,
ஆனால் நமது குழந்தைகள் நம் காலத்திற்குப்பிறகு இதேபோல் ஆஸ்திகர்களாக இருப்பார்களா? இதற்கு பதில் பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது,
ஆம், பெற்றோர்கள்தான் குழந்தைகளை தெய்வத்தின் மீது பற்றுள்ளவர்களாக, தன்னலமின்றி மற்றவருக்கு உதவி செய்பவர்களாக வளர்க்க வேண்டும், இதை எவ்வாறு செய்வது?
பெற்றோர்கள் ஆலயங்கள், ப்ரவசனங்கள் நாம ஸங்கீர்த்தனம், முதலான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது கூடவே குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்,குறிப்பாக ஸ்ரீராமாயணம் ஸ்ரீபாகவதம் பக்தவிஜயம் போன்ற ப்ரவசனங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்,
குழந்தைகளுக்கு நாம் சொல்லும் அறிவுரைகள், நல்வழிகள் விளையாட்டாகத் தோன்றலாம், ஆனால் அவற்றையே மஹான்கள் கூறும்போது ஈடுபாட்டுடன் கேட்டு அதன்படி நடக்கவும் செய்வார்கள். இன்றைய பள்ளி கல்லூரி சூழ்நிலையை விட ஆலயங்களுக்குச்செல்வதும், ராமாயணம் மஹாபாரதம் பாகவதம் போன்ற ப்ரவசனங்களைக் கேட்பதும்தான் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரத்தையும் ஸம்ப்ரதாயத்தையும் நன்நடத்தையும் நன்கு புரியவைக்கும்,
எப்போதும் பள்ளிக்கூடம் கல்லூரி (வேலை) என்று காரணம் சொல்லி ஆன்மிக நிகழ்ச்சிகளில், குறிப்பாக ஏராளமான சிலவுசெய்து வீட்டில் நடத்தப்படும் ஹோமம், பூஜை, ப்ரவசன நிகழ்ச்சிகளில் கூட குழந்தைகள் கலந்து கொள்ளாமல் இருப்பதை மாற்ற முயற்சிக்கலாம்,
பள்ளிப்படிப்பைவிட தெய்வஅருளே முக்கியம், தெய்வ அருளால் சிறிய முயற்சியும் பெரும் வெற்றியைத்த்தரும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்கலாம், பள்ளிக்குச்செல்லும் முன்பாக ஸ்வாமிக்கும் பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்தல், காயத்ரீ ஜபம் செய்தல், நெற்றியில் குங்குமம் சந்தனம் போன்ற திலகம் இட்டுக் கொள்ளுதல் போன்ற அடிப்படை பழக்கங்களைக் கற்றுக்குடுக்கலாம், குழந்தைகளின் வருங்கால நன்மைக்கு பெற்றோர் செய்யும் மிகப்பெரும் உதவி இது தான்,
இதற்குத்தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தி நமது முன்னோர் காட்டிய தார்மிகமான பாதையில் குழந்தைகளையும் நம்முடன் அழைத்துச்செல்ல பகவான் அனுக்ரஹிக்கட்டும்

Let a Vedic priest enter your home every month

Vaithikasri Spiritual cultural Tamil & Sanskrit monthly magazine You can help and strengthen our noble efforts and lofty intensions by becoming a subscriber and advertising in our spiritual monthly. we are bringing out the spiritual monthly VAITHIKASRI with Sri RAJAGOPALA GANAPATIGAL as its editor. The magazine will serve as a spiritual guide to all the religious minded theists and will focus on the innumerable precious thoughts and views contained on our three Veda Sastra.